Blogger Widgets

பெண்ணுக்கு நாணம் வேண்டும்


மனித வாழ்வில் ஒழுக்கம் உயிரை விட உயர்வாகமதிக்கத் தக்கதாகும்  ஒழுக்க நெறி இல்லையேல் மனிதனுக்கும் மிருகத்திற்குமிடையில் வேறுபாடு இல்லாமல்போய் விடும்மற்ற படைப்புகளிடமில்லாத சிறப்பம்சம்ஒன்று மனிதனிடம் உண்டென்றால் அது ஒழுக்க நெறியுடன்கூடிய வாழ்வேயாகும்.
இறைவனின் படைப்பான ஆண்பெண் இருபாலரிடத்திலும் பல விதமான வேறுபாடுகள்காணப்படுகின்றனஅவற்றில் வெட்கத்தையும்நாணத்தையும் அல்லாஹ் பெண்களிடத்தில் அதிகம்வழங்கியுள்ளான்ஆனால் இன்று நாகரீகம் என்ற பெயரில்வெட்கம்நாணம் அனைத்தையும் மறந்து அநாகரீகமானசெயல்களில் பெண்கள் ஈடுபடத் துவங்கி விட்டனர்மேலைநாடுகளில் விடை பெற்று விட்ட இந்த வெட்க உணர்வுதற்போது கீழை நாடுகளிலும் விடைபெறத் துவங்கி விட்டது.அதன் அதிவேக வளர்ச்சி இஸ்லாமியப் பெண்களையும்தொட்டுவிட்டது.
அரைகுறை ஆடை அணிவது அந்நிய ஆண்களோடு ஊர்சுற்றுவது கவர்ச்சிகரமான அலங்காரங்களை செய்துகொண்டு வீதிகளில் உலா வருவது என்று பல அநாகரீகச்செயல்கள் இஸ்லாமிய பெண்களிடம் ஒட்டிக் கொண்டுவிட்டதுவெட்கம் ஈமானில் உள்ளதாகும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள்ஈமான் உள்ளவரிடம் வெட்கம்இருக்க வேண்டும் என நபி(ஸல்அவர்கள்கூறியிருக்கிறார்கள்ஆனால் வெட்கம் கொஞ்சம் கூடஇல்லாமல் வெட்கம் கெட்ட செயலில் மூழ்கியிருக்கிறார்கள்இன்றைய இஸ்லாமியப் பெண்களும்.
அரை குறை ஆடைகள் அணியும் பெண்களுக்கும்உள்ளாடைகளின் நிறம் தெரியுமளவிற்குச் சேலைகள்அணியும் பெண்களுக்கும் வெட்கம் என்பது இல்லையா?அல்லது ஈமானே உள்ளத்தை விட்டு வெளியேறி விட்டதா?
கணவனுக்கு மட்டும் காட்ட வேண்டிய அலங்காரத்தைஉலகமறியக் காட்டுவது தான் நாகரீகமாநங்கையர்களின்நாட்டம் தான் என்ன?
"கன்னிப் பெண்ணும் விதவைப் பெண்ணும் அனுமதிபெறப்படாமல் திருமணம் முடிக்கப்பட மாட்டாள்'' என்று நபி(ஸல்அவர்கள் கூறிய போது, "கன்னிப் பெண்ணின்அனுமதி எப்படி? (அவள் வெட்கப் படுவாளே)'' என்று நபி(ஸல்அவர்களிடம் நபித்தோழர்கள் கேட்டனர்அதற்கு நபி(ஸல்அவர்கள், "அவள் மவுனமாக இருப்பதே அனுமதி''என்று கூறினார்கள் 
அறிவிப்பாளர்ஆயிஷா (ரலி), நூல்புகாரி 5136
அனுமதிக்கப்பட்ட ஒன்றிற்குக் கூட "ஆம்என்று பதில்சொல்ல வெட்கப்பட்ட தீன்குலப் பெண்களின் நாணம் எங்கே?இந்தப் பெண்கள் எங்கே?
நல்ல ஆண்களைக் கூட கெடுக்கும் வண்ணம்அரைகுறை ஆடைகளை அணிந்து கொண்டும் நறுமணப்பொருட்களை பூசிக் கொண்டும் செல்வதால் கெட்டுப்போவது பெண் மட்டுமாநல்ல ஆண்களும் கூடத் தானேவெட்கமில்லாமல் அந்தரங்கப் பகுதிகளை வெளிப்படுத்தும்இப்பெண்கள் அண்ணலாரின் பொன் மொழிக்குச் செவிசாய்ப்பார்களா?
நறுமணம் பூசிதன் கணவனை மயக்கச் செய்யவேஒரு பெண்ணுக்கு அனுமதியுண்டுஅதை விடுத்து தெருத்தெருவாக வீட்டில் உள்ளவர்களை வெளியில் வரவழைக்கும்வண்ணம் நறுமணம் பூசிச் செல்வது விபச்சாரியின்செயலுக்குச் சமமில்லையாஊரிலுள்ளவர்கள் எல்லாம்நம்மைப் பார்க்கின்றார்கள் என்ற வெட்க உணர்வும்இல்லையா?
"எப்பெண்மணி நறுமணத்தை பூசிக் கொள்கிறாளோஅப்பெண் நம்மோடு இஷா தொழுகையில் கலந்து கொள்ளவேண்டாம்'' என்று நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பாளர்அபூஹுரைரா (ரலி), நூல்முஸ்லிம் 760
கடமையான தொழுகையில் கூட நறுமணம் பூசிக்கொண்டு பெண்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று நபி(ஸல்அவர்கள் கூறியதற்குக் காரணம்அதனால் மற்றஆண்களின் பார்வை அங்கு செல்லும் என்பதை விட வேறுஎன்னவாக இருக்கும்வயதுக் கோளாறின் காரணமாக சிலஆண்களின் கவர்ச்சிப் பேச்சிற்கு அடிமைப்பட்டுதனிமையில்சந்திப்பதுபின்னர் அவனால் ஏமாற்றப்பட்டு தற்கொலைஅல்லது தினமும் வேதனை என்ற நிலைக்குப் போகக்காரணம் என்னவெட்கமில்லாமல் அந்நியரோடு ஊர்சுற்றியது தானே!
"எந்தவொரு ஆணும் (அந்நியப்பெண்ணோடுதனித்திருக்க வேண்டாம்ஏனெனில் மூன்றாவதாகஷைத்தான் இருக்கிறான்'' என்று நபி (ஸல்அவர்கள்கூறினார்கள்.  (நூல்அஹ்மத் 109)
"ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில்ஓடுகிறான்'' என்று நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்ஸஃபிய்யா (ரலி), நூல்புகாரி 3281
எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் ஆணும்பெண்ணும் தனித்திருந்தால் ஷைத்தான் தன் வேலையைக்காட்டுகிறான்இதை நிதர்சனமாக நாம் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமதுகற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்டபெண்களுக்குக் கூறுவீராகஅவர்கள் தமது அலங்காரத்தில்வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்தவேண்டாம்தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக்கொள்ளட்டும். (அல்குர்ஆன் 24:31)
நபியின் மனைவியரேநீங்கள் பெண்களில் எவரையும்போன்றோர் அல்லர்நீங்கள் (இறைவனுக்குஅஞ்சினால்குழைந்து பேசாதீர்கள்எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோஅவன் சபலப்படுவான்அழகான கூற்றையே கூறுங்கள்.
உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்முந்தையஅறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல்திரியாதீர்கள்தொழுகையை நிலை நாட்டுங்கள்!ஸகாத்தைக் கொடுங்கள்அல்லாஹ்வுக்கும்அவனதுதூதருக்கும் கட்டுப்படுங்கள்இவ்வீட்டினராகிய உங்களைவிட்டு அசுத்தத்தை நீக்கவும்உங்களை முழுமையாகப்பரிசுத்தப் படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான்.
உங்கள் வீடுகளில் கூறப்படும் அல்லாஹ்வின்வசனங்களையும்ஞானத்தையும் நினையுங்கள்அல்லாஹ்நுணுக்கமானவனாகவும்,  நன்கறிந்தவனாகவும்,இருக்கிறான்.
முஸ்லிமான ஆண்களும்பெண்களும்நம்பிக்கைகொண்ட ஆண்களும்பெண்களும்கட்டுப்பட்டு நடக்கும்ஆண்களும்பெண்களும்உண்மை பேசும் ஆண்களும்,பெண்களும்பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும்,பெண்களும்அடக்கமாக நடக்கும் ஆண்களும்பெண்களும்,தர்மம் செய்யும் ஆண்களும்பெண் களும்நோன்புநோற்கும் ஆண்களும்பெண்களும்தமது கற்பைக் காத்துக்கொள்ளும் ஆண்களும்பெண்களும்அல்லாஹ்வை அதிகம்நினைக்கும் ஆண்களும்பெண்களும் ஆகிய அவர்களுக்குஅல்லாஹ் மன்னிப்பையும்மகத்தான கூலியையும்தயாரித்துள்ளான்.  (அல்குர்ஆன் 33:32-35)
தீன்குலப் பெண்களாக நாம் வாழ வேண்டுமானால் நபி(ஸல்அவர்களின் மனைவியரைப் போன்று கண்ணியம்மிக்க ஆடைகளை அணிந்த பெண்களாகவும்அவசியமில்லாமல் ஊர் சுற்றுவதைத் தவிர்த்து,தொழுகையை முறைப்படி உறுதியுடன்கடைப்பிடிப்பவர்களாகவும்ஜகாத் கொடுப்பவர்களாகவும்இருக்க வேண்டும்அல்லாஹ்வும் அவனது தூதரும்கட்டளையிட்டபடி நடக்க வேண்டும்.
"தீர்ப்பு நாளில் முஃமினின் தராசில் நன்னடத்தையைவிடக் கனமானது எதுவும் இருக்காது'' என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்அபூதர்தா (ரலிநூல்அஹ்மத் (26245),அபூதாவூத் (4166)
நன்மையும் தீமையும் நிறுக்கப்படும் போது நன்மையின்தட்டைத் தாழ்த்தும் பணியில் ஒழுக்கவியலின் பங்கு ஒப்பிடமுடியாதது என்பதை இந்நபிமொழி உணர்த்துகின்றது
"மனிதர்களை அதிகமாக சொர்க்கத்தில் நுழைவிக்கக்கூடியது எதுஎன நபி (ஸல்அவர்களிடம் வினவப்பட்டபோது, "இறையச்சமும் நன்னடத்தையுமே'' எனபதிலளித்தார்கள். "நரகில் மனிதர்களை எது அதிகம்நுழைவிக்கும்?'' என கேட்கப்பட்ட போது, "வாயும்பாலுறுப்பும்'' என பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர்அபூஹுரைரா (ரலி), நூல்கள்அஹ்மத்(7566), திர்மிதீ (1927), இப்னு மாஜா (4236)
நம் அனைவரையும் குர்ஆன்ஹதீஸ் ஒளியில்நடக்கும் நல்லொழுக்கமுள்ள பெண்களாக அல்லாஹ் ஆக்கிஅருள்வானாக!
Share on :
 
© Copyright சுவர்கத்தின் பெண்மணி 2011 - Some rights reserved | Powered by Blogger.com.